“அமைச்சர் துரைக்கண்ணு முழு நலம் பெற்று மீண்டும் வர வேண்டும்” – மு.க ஸ்டாலின் பதிவு!

 

“அமைச்சர் துரைக்கண்ணு முழு நலம் பெற்று மீண்டும் வர வேண்டும்” – மு.க ஸ்டாலின் பதிவு!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைக்கண்ணு, பூரண குணமடைய பிரார்த்திப்பதாக மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“அமைச்சர் துரைக்கண்ணு முழு நலம் பெற்று மீண்டும் வர வேண்டும்” – மு.க ஸ்டாலின் பதிவு!

தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் கடந்த 13ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானதால், மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.அவரது 90% நுரையீரல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

“அமைச்சர் துரைக்கண்ணு முழு நலம் பெற்று மீண்டும் வர வேண்டும்” – மு.க ஸ்டாலின் பதிவு!

அதுமட்டுமில்லாமல் அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து பின்னடைவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. அதனால், அமைச்சர் விஜயபாஸ்கரும் முதல்வர் பழனிசாமியும் மருத்துவமனைக்கே சென்று அமைச்சரின் உடல்நலம் குறித்து விசாரித்தனர். இந்த நிலையில், துரைக்கண்ணு குணமடைந்து மீண்டு வர வேண்டும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், “#Covid19-ஆல் பாதிக்கப்பட்ட தமிழக அமைச்சர் திரு. துரைக்கண்ணு அவர்களின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு ‘எக்மோ கருவி’ மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவது அறிந்து அதிர்ச்சி அடைகிறேன். அமைச்சர் அவர்கள் முழு நலம் பெற்று மீண்டும் மக்கள் பணியாற்ற வர வேண்டும் என விரும்புகிறேன்!” என குறிப்பிட்டுள்ளார்.