‘செய்யூர் தொகுதி எம்.எல்.ஏ ஆர்.டி.அரசு விரைந்து நலம் பெற விழைகிறேன்’ – மு.க ஸ்டாலின் ட்வீட்!

 

‘செய்யூர் தொகுதி எம்.எல்.ஏ ஆர்.டி.அரசு விரைந்து நலம் பெற விழைகிறேன்’ – மு.க ஸ்டாலின் ட்வீட்!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முறையான தடுப்பு நடவடிக்கைகள் இல்லாமல் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கியதாலும், அரசின் அறிவுறுத்தல்களை கேட்காததாலும் அன்பழகனை இழக்க நேரிட்டது என்று முதல்வர் பழனிசாமி சமீபத்தில் பேசியிருந்தார்.

‘செய்யூர் தொகுதி எம்.எல்.ஏ ஆர்.டி.அரசு விரைந்து நலம் பெற விழைகிறேன்’ – மு.க ஸ்டாலின் ட்வீட்!

இதனைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஆர்.டி.அரசுக்கு கொரோனா உறுதியானது, அதனால் அவர் தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ ஆர்.டி அரசு விரைந்து நலம் பெற வேண்டும் என்று மு.க ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், #Covid19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கழகத்தின் செய்யூர் MLA @dr_rtarasu_ அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன். மக்கள் பணியில் அவருக்குள்ள அக்கறையும், தன்னம்பிக்கையும், தொடர்ந்து மேற்கொண்டு வரும் சிகிச்சையும் அவரை மீண்டும் வழக்கம்போல பணியாற்றச் செய்திடும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.