தொடர் லாக் அப் மரணங்கள்!! உயிர்க்குடிக்கும் மாவட்டமாக தூத்துக்குடி மாறிவருகிறது- மு.க.ஸ்டாலின்
கடந்த சில நாட்களாக பொதுமக்கள் மீது போலீசார் தாக்குதல் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக இரு நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதால் தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இவ்வாறு காவலர்கள் மீது புகார்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரத்தில் போலீசார் தாக்கியதால் கட்டிட தொழிலாளியான கணேச மூர்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.
#JUSTICEFORJAYARAJANDBENNIX கிடைக்காத நிலையில்
எட்டயபுரம் கட்டடத் தொழிலாளி கணேசமூர்த்தி போலீசாரால் தாக்கப்பட்டு மனமுடைந்து தற்கொலை செய்துள்ளார்.உயிர்குடிக்கும் மாவட்டமாக தூத்துக்குடி மாறிவருகிறது.
அப்பாவி மக்களைக் காப்பாற்றாமல் தவறு செய்பவர்களை காப்பாற்றுகிறாரா @CMOTamilNadu? https://t.co/Cyu5um1mWh
— M.K.Stalin (@mkstalin) June 27, 2020
இந்நிலையில் கட்டிட தொழிலாளி உயிரிழப்பு தொடர்பான செய்தியை ட்விட்டரில் பகிர்ந்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “#JUSTICEFORJAYARAJANDBENNIX கிடைக்காத நிலையில் எட்டயபுரம் கட்டடத் தொழிலாளி கணேசமூர்த்தி போலீசாரால் தாக்கப்பட்டு மனமுடைந்து தற்கொலை செய்துள்ளார். உயிர்குடிக்கும் மாவட்டமாக தூத்துக்குடி மாறிவருகிறது. அப்பாவி மக்களைக் காப்பாற்றாமல் தவறு செய்பவர்களை காப்பாற்றுகிறாரா முதலமைச்சர் பழனிசாமி?” என கேள்வி எழுப்பியுள்ளார்.