“அடிமை அதிமுக அரசு வேடிக்கை; மானமுள்ள தி.மு.க. பொறுக்காது” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!

 

“அடிமை அதிமுக அரசு வேடிக்கை; மானமுள்ள தி.மு.க. பொறுக்காது” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!

திருவள்ளுவருக்கு ஆரிய அரிதாரம் பூசுவதா? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“அடிமை அதிமுக அரசு வேடிக்கை; மானமுள்ள தி.மு.க. பொறுக்காது” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!

சிபிஎஸ்இ 8 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள திருவள்ளுவரின் உருவபடம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. விபூதி பட்டை, ருத்ராட்சம் அணிந்து, குடுமி வைத்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிராமணர் போல காட்சியளிக்கும் திருவள்ளுவரை கண்டு கொந்தளித்துள்ளன தமிழக அரசியல் கட்சிகள். ஏற்கனவே பாஜக திருவள்ளுவரின் உருவப்படத்தை காவி நிறத்தில் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தி விமர்சனத்திற்குள்ளது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “#CBSE 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகம் ஒன்றில் அய்யன் திருவள்ளுவருக்கு ஆரிய அரிதாரம்! பா.ஜ.க. அரசு அனுமதிக்கிறது; அடிமை அ.தி.மு.க. அரசு வேடிக்கை பார்க்கிறது. ஆரிய வித்தைகளை எம் தமிழர் பண்பாட்டில் காட்ட எத்தனித்தால் தமிழகம் ஏற்காது; மானமுள்ள தி.மு.க. பொறுக்காது. எச்சரிக்கை!” என்று பதிவிட்டுள்ளார்.

“அடிமை அதிமுக அரசு வேடிக்கை; மானமுள்ள தி.மு.க. பொறுக்காது” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!

முன்னதாக தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் உருவப்படத்தை 1959 ஆம் ஆண்டு வெள்ளை உடையில் வள்ளுவர் அமர்ந்திருப்பது போல வடிவமைத்தது.இந்த புகைப்படம் தான் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த படத்தையே பயன்படுத்த வேண்டும் என்று அரசாணை வெளியிட்டது. ஆனால் பாஜக அரசோ திருவள்ளுவருக்கு புதுப்புது வடிவங்கள் கொடுத்து வருவது மேலும் மேலும் சர்ச்சையையே உண்டாக்கி வருகிறது.