ஐபிஎல் பக்கம் திரும்பிய எதிர்க்கட்சி தலைவர்!

 

ஐபிஎல் பக்கம் திரும்பிய எதிர்க்கட்சி தலைவர்!

தோனி வெறியர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கிடந்த ஐபிஎல் 2020 போட்டி ஐக்கிய அமீரகத்தில் போட்டி தொடங்கியது. 3 முறை ஐபிஎல் கோப்பையை தட்டி சென்ற சென்னை அணி ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். கிட்டத்தட்ட ஒரு மாதம் முன்பே வீரர்கள், கொரோனா பரிசோதனை செய்துகொண்டு பயிற்சி எடுத்து வருகின்றனர். முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸை எதிர்கொள்கிறது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் டீம். ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல்நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடி வருகிறது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தி, “ மஞ்சள் நிற அணியினர் களத்தில் இறங்கும் நேரம் வந்துவிட்டது என உங்களுக்கு தெரியும், கர்ஜிக்க உள்ள சிங்கங்களுக்கு தமது மண்ணிலிருந்து விசில் அடிப்போம்” என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கேப்டன் தோனி மற்றும் அணிக்கு அதிர்ஷ்டம் கிடைக்க தனது வாழ்த்துக்கள் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.