ரெம்டெசிவிர் மருந்து கொடுத்ததற்கு நன்றி! மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

 

ரெம்டெசிவிர் மருந்து கொடுத்ததற்கு நன்றி! மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழகத்திற்கு ரெம்டிசிவர் மருந்து ஒதுக்கீடு நாளொன்றுக்கு 7000 என்ற அளவில் இருந்த நிலையில், தன்னுடைய கோரிக்கையை ஏற்று நாளொன்றுக்கு 20 ஆயிரமாக அதிகரித்தற்கு நன்றி என மத்திய அமைச்சர் பியுஷ் கோயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ரெம்டெசிவிர் மருந்து கொடுத்ததற்கு நன்றி! மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று 16.5.2021 ஒன்றிய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதினை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டிற்கு வழங்கி வரும் ரெம்டிசிவர் மருந்து ஒதுக்கீட்டு அளவினை உயர்த்தி வழங்குமாறு மத்திய அமைச்சரிடம் கோரிக்கைவிடுத்திருந்தார்.

இக்கோரிக்கையினை ஏற்று நாளொன்றுக்கு 7000 என்ற அளவில் வழங்கி வந்த ரெம்டிசிவர் மருந்தினை தற்பொழுது நாளொன்றுக்கு 20,000 என்ற அளவில் உடனடியாக உயர்த்தி வழங்கியமைக்காக தன் நன்றியினை மாண்புமிகு முதலமைச்சர் தெரிவித்துக் கொண்டுள்ளார். கொடிய கொரோனா பெரும் தொற்றினை எதிர்த்து போராடிடும் இத்தருணத்தில், குறித்த நேரத்தில் உயிர் காக்கும் மருந்து, ஆக்ஸிஜன் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றின் தேவை இன்றியமையாதது எனவும் தனது கடிதத்தில் மாண்புமிகு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.