“நாக்கு அழுகிடும்”பார்த்து பேசுங்க : கண்டமேனிக்கு சாபமிட்ட ஸ்டாலின்

 

“நாக்கு அழுகிடும்”பார்த்து பேசுங்க :  கண்டமேனிக்கு சாபமிட்ட ஸ்டாலின்

சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் இன்று திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தஞ்சை, திருவையாறு, பட்டுக்கோட்டை, பாபநாசம் உள்ளிட்ட தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

“நாக்கு அழுகிடும்”பார்த்து பேசுங்க :  கண்டமேனிக்கு சாபமிட்ட ஸ்டாலின்

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் பரப்புரை மேற்கொண்ட திமுக தலைவர் முக ஸ்டாலின்,
விவசாயிகளுக்கு துரோகம் செய்து வருகிறார் பழனிசாமி. காவிரி உரிமையை மீட்டுக் கொடுத்தது திமுக. அதைவிடுத்து திமுக , கலைஞர் குறித்து அவதூறாக பேசினால் உங்கள் நாக்கு அழுகி விடும். தமிழகத்தை மத்திய அரசிடம் அடக்கு வைத்தவர் எடப்பாடி பழனிசாமி. காவிரி நடுவர் மன்றம் அமைக்க கடந்த 1975 முதல் போராடி இடைக்காலத் தீர்ப்பை பெற்றுத் தந்தவர் கருணாநிதி. காவிரி உரிமைக்காக போராடியவர் தலைவர் கலைஞர் கருணாநிதி. எனக்கு விவசாயிகளை பிடிக்கும். எடப்பாடி போன்ற போலி விவசாயிகளை பிடிக்காது” என்றார்.

“நாக்கு அழுகிடும்”பார்த்து பேசுங்க :  கண்டமேனிக்கு சாபமிட்ட ஸ்டாலின்

தொடர்ந்து பேசிய அவர், “டெல்லியில் போராடும் விவசாயிகளை இடைத்தரகர்கள் என்று கூறிய பழனிசாமி விவசாயியா? விவசாயிகளின் உரிமையை பறிகொடுக்கும் எடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல; ஆவர் ஓர் விஷ வாயு. திமுக ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளுக்கு தனி பட்ஜெட், நெல்லுக்கு ரூ. 2,500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,000 அளிக்கப்படும்” என்று கூறியதுடன் வேளாண் கடனை அடைக்க நிதியில்லை என்று கூறிவிட்டு திமுக கூறியதும் ரத்து செய்துள்ளார்கள்” என்றார்.