கோவில்பட்டி சிறையில் தந்தை, மகன் சந்தேகமான முறையில் மரணமடைந்தது அதிர்ச்சி அளிக்கிறது : மு.க.ஸ்டாலின்

 

கோவில்பட்டி சிறையில் தந்தை, மகன் சந்தேகமான முறையில் மரணமடைந்தது அதிர்ச்சி அளிக்கிறது : மு.க.ஸ்டாலின்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். இவர் கடந்த 20 ஆம் தேதி முழு பொதுமுடக்கம் நடைமுறைகளை மீறி நீண்ட நேரம் கடையை திறந்து வைத்திருந்ததாக தெரிகிறது. இதனால் சாத்தான்குளம் போலீசார் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

கோவில்பட்டி சிறையில் தந்தை, மகன் சந்தேகமான முறையில் மரணமடைந்தது அதிர்ச்சி அளிக்கிறது : மு.க.ஸ்டாலின்

காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணனும், ரகுகணேஷ் ஆகிய இருவரும் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் கடுமையாகத் தாக்கியதுடன், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு பதிவு செய்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். இதையடுத்து காயம் காரணமாக ஜெயராஜ் மருத்துவச் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கோவில்பட்டி சிறையில் தந்தை, மகன் சந்தேகமான முறையில் மரணமடைந்தது அதிர்ச்சி அளிக்கிறது : மு.க.ஸ்டாலின்

இதை தொடர்ந்து கோவில்பட்டி கிளைச்சிறையில் இருந்த பென்னிக்ஸ் நேற்றிரவு உயிரிழக்க, ஜெயராஜ் மருத்துவமனையில் இன்று காலை பலியானார். போலீசாரின் தாக்குதலால் தான் இரண்டு உயிரிழப்புகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவில்பட்டி சிறையில் தந்தை, மகன் சந்தேகமான முறையில் மரணமடைந்தது அதிர்ச்சி அளிக்கிறது : மு.க.ஸ்டாலின்

இந்நிலையில் இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பறிக்கப்பட்ட உயிர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். கோவில்பட்டி சிறையில் தந்தை, மகன் சந்தேகமான முறையில் மரணமடைந்தது அதிர்ச்சி அளிக்கிறது.தந்தை, மகன் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் ” என்று தெரிவித்துள்ளார்.