“வண்டிய திருப்புங்க” மிரட்டிய ஸ்டாலின்… ஆடிப்போன வேலுமணி – அதிர்ந்த தொண்டாமுத்தூர்!

 

“வண்டிய திருப்புங்க” மிரட்டிய ஸ்டாலின்… ஆடிப்போன வேலுமணி – அதிர்ந்த தொண்டாமுத்தூர்!

தேர்தல் ஆரம்பிப்பதற்கு முன்பே அமைச்சர்களை அவர்கள் தொகுதியிலேயே தோற்கடிக்க வேண்டும் என்று ஸ்டாலின் சூளுரைத்தார். அதற்காக நேர்காணலில் பார்த்து பார்த்து வேட்பாளர்களைத் தேர்வுசெய்து அமைச்சர்களுக்கு எதிராக களமிறக்கினார். அங்கு நிர்வாகிகள் எள் என்றால் எண்ணெயாய் வேலை செய்ய வேண்டும் என்பது மீற முடியாத அதிரடி உத்தரவு. அதற்கேற்றவாறு ‘வைட்டமின் ப – சத்து மாத்திரையும்’ மற்ற தொகுதிகளைக் காட்டிலும் அதிகமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் நிர்வாகிகள் தீயாய் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

“வண்டிய திருப்புங்க” மிரட்டிய ஸ்டாலின்… ஆடிப்போன வேலுமணி – அதிர்ந்த தொண்டாமுத்தூர்!

இதனால் அமைச்சர்கள் தங்கள் தொகுதியை விட்டு நகர முடியாமல் தவிக்கின்றனர். அவர்களால் வேறு தொகுதிகளுக்குச் சென்று பிரச்சாரம் கூட செய்ய முடியவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்கிறார். துணை முதல்வர் ஓபிஎஸ்ஸின் தூக்கத்தை தங்க தமிழ்ச்செல்வன் கெடுப்பதால் அவராலும் முடியவில்லை என்பதே பரிதாபத்தின் உச்சம். அந்தளவிற்கு ஸ்டாலின் செக்மேட் வைத்திருக்கிறார். அனைத்து அமைச்சர்களும் தோற்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், ஸ்டாலினுக்கு பெர்சனலாக தொண்டாமுத்தூரில் எஸ்பி வேலுமணியை மண்ணை கவ்வ வைக்க வேண்டும் என்பது பேராசை.

“வண்டிய திருப்புங்க” மிரட்டிய ஸ்டாலின்… ஆடிப்போன வேலுமணி – அதிர்ந்த தொண்டாமுத்தூர்!

அதனால் தான் காங்கேயம் காளை கார்த்திகேய சிவசேனாதிபதி எனும் நட்சத்திரத்தைக் களமிறக்கியுள்ளார். அவரும் அமைச்சரின் ஊழல் பட்டியலை வாசித்துக் காண்பித்து மக்களிடம் வாக்கு சேகரித்துவருகிறார். ஸ்டாலினும் பிரச்சாரத்துக்குச் செல்லும்போது வேலுமணியைக் கடுமையாக விமர்சித்தார். இது ஒருபுறம் என்றால் கோவையில் ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் வேலுமணிக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள் என ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க, அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். இதனால் சத்து மாத்திரைகளை மக்களுக்கு அளிக்க முடியாமல் திணறுகிறார் வேலுமணி.

“வண்டிய திருப்புங்க” மிரட்டிய ஸ்டாலின்… ஆடிப்போன வேலுமணி – அதிர்ந்த தொண்டாமுத்தூர்!

இச்சூழலில் நேற்று மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, வால்பாறை பகுதிகளில் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு வால்பாறையிலிருந்து விமான நிலையம் அவரின் கார் சென்றுகொண்டிருந்துள்ளது. அப்போது என்ன நினைத்தாரோ என்று தெரியவில்லை. சட்டென்று “வண்டிய தொண்டாமுத்தூருக்கு திருப்புங்க” என்று டிரைவரிடம் சொல்லியிருக்கிறார். அப்போதே சேனாதிபதிக்கு தலைவர் வருகிறார் என தகவல் பறந்திருக்கிறது. அலர்ட்டான அவர் ஸ்டாலினை வரவேற்க தயாராகியுள்ளார்.

“வண்டிய திருப்புங்க” மிரட்டிய ஸ்டாலின்… ஆடிப்போன வேலுமணி – அதிர்ந்த தொண்டாமுத்தூர்!

இரவு 10 மணிக்கு தொண்டாமுத்தூர் ஆர்எஸ் புரத்தில் இறங்கிய ஸ்டாலின், களத்தில் வரிந்துகட்டி வாக்கு சேகரித்து அதகளம் புரிந்திருக்கிறார். இதிலிருந்தே அவரின் போராட்டக் குணத்தைப் புரிந்துகொள்ளலாம் என உடன்பிறப்புகள் சமூக வலைதளங்களில் கொண்டாடிவருகின்றனர். ஸ்டாலின் தனது தொகுதியை கார்னர் செய்வதால் பதறிப் போய் இருக்கிறராம் எஸ்பி வேலுமணி. ஸ்டாலின் போடுக்கும் கணக்கு பலிக்குமா? தொண்டாமுத்தூரில் தப்புவாரா வேலுமணி? ரகசியம் மக்கள் விரல் நுனியில்!