மக்கள் பிரச்னைகளை மாமன்றத்தில் எடுத்துவைத்து தீர்வு கண்டவர் வெற்றிவேல்! உருகும் ஸ்டாலின்

 

மக்கள் பிரச்னைகளை மாமன்றத்தில் எடுத்துவைத்து தீர்வு கண்டவர் வெற்றிவேல்! உருகும் ஸ்டாலின்

கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த அமமுக பொருளாளரும், முன்னாள் எம்எல்ஏவான வெற்றிவேலின் மரணத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “அ.ம.மு.க. பொருளாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. வெற்றிவேல் அவர்கள் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனளிக்காமல் மறைவெய்தினார் என்ற வேதனை மிகுந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அவரது மறைவிற்கு தி.மு.க. சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் சென்னை மாநகர மேயராக இருந்தபோது – மாமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றி, அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளை, தேவைகளை மாமன்றத்தில் எடுத்து வைத்து, அவற்றிற்குத் தீர்வு கண்டவர்.

மக்கள் பிரச்னைகளை மாமன்றத்தில் எடுத்துவைத்து தீர்வு கண்டவர் வெற்றிவேல்! உருகும் ஸ்டாலின்

சட்டமன்ற உறுப்பினராக, தான் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.கே.நகர் மற்றும் பெரம்பூர் தொகுதி மக்களின் பிரச்சினைகளைச் சட்டமன்றத்தில் ஆக்கபூர்வமாக எடுத்து வைத்துப் பேசக்கூடியவர். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், அவர் சார்ந்த கட்சித் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.