” பொள்ளாச்சி வழக்கில் ஆளுங்கட்சியின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறி விடும்” – மு.க.ஸ்டாலின்

 

” பொள்ளாச்சி வழக்கில் ஆளுங்கட்சியின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறி விடும்” – மு.க.ஸ்டாலின்

பொள்ளாச்சி போராட்டத்தை தடுத்தால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடக்கும் என்று மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

” பொள்ளாச்சி வழக்கில் ஆளுங்கட்சியின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறி விடும்” – மு.க.ஸ்டாலின்

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 5 பேர் கைதாகி சிறையில் உள்ள நிலையில், சமீபத்தில் அதிமுக நிர்வாகி அருளானந்தம் உள்ளிட்ட மூன்று பேர் சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யக்கோரி திமுக போராட்டம் அறிவித்த நிலையில் கனிமொழி எம்.பி இன்று பொள்ளாச்சி சென்றார். பொள்ளாச்சி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்ற திமுக எம்.பி. கனிமொழியை போலீசார் கோவையில் தடுத்து நிறுத்தினர். கற்பகம் கல்லூரி அருகே போலீசார் தடுத்து நிறுத்தியதை கண்டித்து கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

” பொள்ளாச்சி வழக்கில் ஆளுங்கட்சியின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறி விடும்” – மு.க.ஸ்டாலின்

இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் கோரி திமுக சார்பில் நடைபெறும் போராட்டத்தை போலீசார் தடுத்தால் தமிழகம் முழுவதும் மகளிர் அணியினர் போராட்டம் நடத்துவர் என்று மு.க .ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சியின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறி விடும் என்பதால் கோவையில் கனிமொழி தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளார் என்று சென்னை ராயபுரத்தில் மக்கள் வார்டு சபை கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்