மக்களிடம் நல்ல பெயர் எடுக்கணும்; தவறு செய்தால் பதவி நீக்கம்! அமைச்சர்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

 

மக்களிடம் நல்ல பெயர் எடுக்கணும்; தவறு செய்தால் பதவி நீக்கம்! அமைச்சர்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

அமைச்சர்கள் தவறு செய்தால் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மக்களிடம் நல்ல பெயர் எடுக்கணும்; தவறு செய்தால் பதவி நீக்கம்! அமைச்சர்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், “அமைச்சர்கள் தங்கள் துறையில் ஏதேனும் தவறு செய்தால், உடனடியாக பதவி நீக்கம் செய்யப்படுவார்கள். தொகுதி பிரச்சினைகளை நேரடியாக என்னிடம் முறையிடலாம். அமைச்சர்களின் உதவியாளர்கள் நியமனம் உள்பட அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்.

கட்சி பிரச்சினைக்காக காவல்துறைக்கு போன் செய்யக் கூடாது. மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும். அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த புள்ளி விவரங்களை தெரிந்து வைத்திருக்கவேண்டும்.திமுக ஆட்சியை பற்றி தற்போதைய தலைமுறையல்ல எதிர்கால தலைமுறையும் பேசவேண்டும்” என அறிவுறுத்தினார்.