தரமில்லாத பொருட்களையே ரேஷன் கடைகள் வழியாக மக்கள் தலையில் கட்டுகின்றனர்- ஸ்டாலின்

 

தரமில்லாத பொருட்களையே ரேஷன் கடைகள் வழியாக மக்கள் தலையில் கட்டுகின்றனர்- ஸ்டாலின்

நெல்லையில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். 5 தொகுதிகளில் போட்டியிடும், திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “விலைவாசி ஏறியது பற்றி மத்திய, மாநில அரசுகளுக்கு கவலைப்படவில்லை. கொரோனா தடுப்பூசிக்கு யாரும் பயப்பட வேண்டாம். எனக்கும் பயம் ஏற்படுத்தினார்கள், ஆனால் நான் அதை பொருட்படுத்தாமல் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். விஷப் பல்லி, விஷப் பாம்பின் விஷத்தைவிட துரோகம் என்பதுதான் கடுமையான விஷம். அந்த துரோகத்தை செய்தவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. யாரால் பதவி கிடைத்ததோ அந்த சசிகலாவுக்கும், ஜெயலலிதாவுக்கும் துரோகம் செய்தவர் அவர், தற்போது அதிமுகவுக்கு துரோகம் செய்துக்கொண்டிருக்கிறார். அதிமுக, பாஜகவின் கிளைக்கழகமாக மாறிவிட்டது. பாஜக தலைவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதையே அதிமுகவினர் செய்கிறார்கள். பாஜகவிடம் ஆட்சியை அடகு வைத்துவிட்டனர்.

தரமில்லாத பொருட்களையே ரேஷன் கடைகள் வழியாக மக்கள் தலையில் கட்டுகின்றனர்- ஸ்டாலின்

தேர்தல் வருவது தெரிந்தும் அனைத்து வழக்குகளையும் வாபஸ் செய்த எடப்பாடி பழனிசாமி, கூடங்குளம் போராட்ட வழக்குகளை மட்டும் வாபஸ் பெறாதது ஏன்? திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கூடாங்குளம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான தேசத்துரோக வழக்குகள் வாபஸ் பெறப்படும். தரமில்லாத பொருட்களையே ரேஷன் கடைகள் வழியாக மக்கள் தலையில் கட்டுகின்றனர். மக்கள் தெளிவாக உள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தபிறகு 100 நாட்களில் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்” எனக் கூறினார்.