பாஜக செய்யும் தவறுகளை தட்டிக்கேட்க வக்கில்லாதது அதிமுக ஆட்சி- ஸ்டாலின்

 

பாஜக செய்யும் தவறுகளை தட்டிக்கேட்க வக்கில்லாதது அதிமுக ஆட்சி- ஸ்டாலின்

புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் உள்ள திமுக அலுவலகத்தில் 8 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வெண்கல சிலையை திமுக தலைவர் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

தொடர்ந்து புதுக்கோட்டையில் ’தமிழகத்தில் மீட்போம்’ என்ற தலைப்பில் திமுக சார்பில் சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் 600 இடங்களில் அக்கட்சியைச் சேர்ந்தவர்களும் பொதுமக்களும் பொதுக்கூட்டத்தைக் கண்டு ரசித்தனர். இக்கூடத்தில் சென்னையிலிருந்து காணொலி மூலம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்து பல ஆண்டுகள் ஆகியும் இன்று வரை செங்கல் கூட எடுத்து வைக்காமல் பாஜக மக்களை ஏமாற்றி வருகிறது. மேலும் மக்களை ஏமாற்றுவதற்காக எய்ம்ஸ் நிர்வாக குழு அமைக்கப்பட்டுள்ளது.

பாஜக செய்யும் தவறுகளை தட்டிக்கேட்க வக்கில்லாதது அதிமுக ஆட்சி- ஸ்டாலின்

இந்த குழுவில் மதுரையைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்திருக்க வேண்டும். ஆனால் அதைவிட்டு விட்டு சர்ச்சைக்கு உள்ளான ஆர்எஸ்எஸ் நபரை இந்த குழுவில் நியமனம் செய்திருக்கிறது, எய்ம்ஸ் மருத்துவமனையை ஏற்கனவே கொண்டுவர துப்பில்லாத ஆட்சியாக பாஜக ஆட்சி உள்ளது, அதை தட்டிக்கேட்க வக்கில்லாத ஆட்சியாக தமிழக அதிமுக ஆட்சி உள்ளது. தமிழக அரசு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளாததால் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது ” என சாடினார்.