கொரோனா வழக்குகள் வாபஸ்… முதல்வரின் முதலைக் கண்ணீரை மக்கள் அறிவார்கள் – ஸ்டாலின் தாக்கு!

 

கொரோனா வழக்குகள் வாபஸ்… முதல்வரின் முதலைக் கண்ணீரை மக்கள் அறிவார்கள் – ஸ்டாலின் தாக்கு!

தமிழகத்தில் தேர்தல் நெருங்கிக்கொண்டிருப்பதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறார். குறிப்பாக, கடந்த நான்கு வருடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு தரப்பினர் மீதான வழக்குகளைத் திரும்பப்பெறுவதாக அறிவித்துவருகிறார். முதலாவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றார்.

இச்சூழலில் இன்று கொரோனா ஊரடங்கில் பதியப்பட்ட 10 லட்சம் வழக்குகள், சிஏஏ போராட்டத்திற்கான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் அறிவித்தார். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளையும் ரத்து செய்ய பரிசீலனை செய்யப்படும் என்றார். எப்போதும் போல இந்த வழக்குகளைத் திரும்பப்பெற எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் முன்பே வலியுறுத்தியிருக்கிறார்.

கொரோனா வழக்குகள் வாபஸ்… முதல்வரின் முதலைக் கண்ணீரை மக்கள் அறிவார்கள் – ஸ்டாலின் தாக்கு!

சில மாதங்களுக்கு முன்பு ஸ்டாலின் வலியுறுத்துவதும், உடனே முதல்வர் நடவடிக்கை எடுப்பதும் தொடர்கதையாக இருக்கிறது. தற்போது இதுதொடர்பாகக் கூறியுள்ள ஸ்டாலின், “கொரோனா பேரிடர் காலத்தில் பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசு, அவர்களைப் பல வகைகளிலும் வதைத்ததுடன், வழக்கும் போட்டுத் துன்புறுத்தியதை அப்போதே சுட்டிக்காட்டியிருந்தேன். இந்த வழக்குகளால் இளைஞர்களின் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான பயணம் உள்ளிட்ட பல வாழ்வாதாரச் சிக்கல்கள் ஏற்பட்டு வருவதைக் கடந்த ஜனவரி மாதமே விரிவாக எடுத்துரைத்தேன்.

அப்போதும், அலட்சியம் காட்டிய முதல்வர் பழனிசாமி, இப்போது தேர்தல் நெருங்கி வருகிறது என்றதும் வழக்குகள் வாபஸ் என அறிவித்திருக்கிறார். சிஏஏவை எதிர்த்துப் போராடியவர்கள் மீதான வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்றும், கூடங்குளம் அணுமின் நிலையப் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப்பெறுவது குறித்து சட்டத்திற்கு உட்பட்டுப் பரிசீலிக்கப்படும் எனவும் தனது பரப்புரையில் வரிசையாக அறிவித்திருக்கிறார்.

கொரோனா வழக்குகள் வாபஸ்… முதல்வரின் முதலைக் கண்ணீரை மக்கள் அறிவார்கள் – ஸ்டாலின் தாக்கு!

முதலமைச்சரின் முதலை கண்ணீரைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள் என்றபோதும், திமுக முன்வைத்த கோரிக்கையைக் காலந்தாழ்த்தியேனும் நிறைவேற்றியாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்த அரசு உள்ளது. வெற்று அறிவிப்பாக இல்லாமல் விரைந்து நிறைவேற்ற வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.