“மிஸ்டர் வேலுமணி… திமுகனா யாருனு இப்போ தெரியுதா?” – அமைச்சர் கோட்டையில் ஏறி சூளுரைத்த ஸ்டாலின்… ஆர்ப்பரித்த மக்கள் வெள்ளம்!

 

“மிஸ்டர் வேலுமணி… திமுகனா யாருனு இப்போ தெரியுதா?” – அமைச்சர் கோட்டையில் ஏறி சூளுரைத்த ஸ்டாலின்… ஆர்ப்பரித்த மக்கள் வெள்ளம்!

முதலமைச்சர், துணை முதலமைச்சர் உட்பட அனைத்து அமைச்சர்களும் தோற்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், ஸ்டாலினுக்கு பெர்சனலாக தொண்டாமுத்தூரில் எஸ்பி வேலுமணியை மண்ணை கவ்வ வைக்க வேண்டும் என்பது பேராசையாக இருக்கிறது. தொண்டாமுத்தூரை அவர் ட்ரீட் செய்யும் விதமே அதைச் சொல்லாமல் சொல்லிவிடுகிறது. நேற்று வால்பாறையில் பிரச்சாரம் செய்து சென்னை திரும்ப விமான நிலையத்திற்குக் காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.

“மிஸ்டர் வேலுமணி… திமுகனா யாருனு இப்போ தெரியுதா?” – அமைச்சர் கோட்டையில் ஏறி சூளுரைத்த ஸ்டாலின்… ஆர்ப்பரித்த மக்கள் வெள்ளம்!

அப்போது சட்டென்று வண்டிய தொண்டாமுத்தூர் பக்கம் திருப்புங்க என்று டிரைவரை பணித்துள்ளார். ஷெட்யூல் இல்லாமல் ஸ்டாலின் போட்ட உத்தரவால் அனைவரும் ஷாக் ஆகியுள்ளனர். இதனை அறிந்ததும் இன்ப அதிர்ச்சியில் கார்த்திகேய சேனாதிபதி திகைத்துள்ளார். இரவு 9 மணிக்கு தொகுதிக்குள் இறங்கிய ஸ்டாலின் நடந்தவாறே வாக்கு சேகரித்து அதகளம் செய்துள்ளார். இச்சூழலில் இன்று கோவை மாவட்டத்திலுள்ள தொகுதிகளில் பிரச்சாரம் செய்துவருகிறார்.

அப்போது பேசிய ஸ்டாலின், “கோவையிலுள்ள 21 தொகுதிகளையும் நான் பார்த்துக்கிறேன் என்று அமைச்சர் வேலுமணி கூறினார். ஆனால் நாங்களோ அவரை அவர் தொகுதியை விட்டு நகரமுடியாமல் செய்துள்ளோம். இது தான்டா திமுக. மிஸ்டர் வேலுமணி திமுகனான இப்போ தெரியுதா? பதவியில் இருப்பதால் இப்போது ஆடலாம். ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆட்டத்தை எல்லாம் அடக்கிவிடுவோம். ஆளுநர் நடவடிக்கை எடுக்கிறாரோ இல்லையோ நானே தலையிட்டு உங்கள சிறைக்குள்ளே தள்ளுவேன்” என்றார்.