“எடப்பாடி பக்கம் திருப்பிட்டாரு பாத்தீங்ளா… பலே ஆளு ஓபிஎஸ்” – கொளுத்தி போட்ட ஸ்டாலின்!

 

“எடப்பாடி பக்கம் திருப்பிட்டாரு பாத்தீங்ளா… பலே ஆளு ஓபிஎஸ்” – கொளுத்தி போட்ட ஸ்டாலின்!

தமிழ்நாடு முழுவதும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரம் செய்துவருகிறார். இன்று துணை முதல்வர் ஓபிஎஸ் போட்டியிடும் போடிநாயக்கனூரில் திமுக சார்பில் நிற்கும் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், “அதிமுகவிற்கு துரோகம் செய்தவர்கள் டெபாசிட் கூட வாங்கமாட்டார்கள் என ஓபிஎஸ்ஸை மறைமுகமாக தாக்கி முதல்வர் பேசியுள்ளார்.

“எடப்பாடி பக்கம் திருப்பிட்டாரு பாத்தீங்ளா… பலே ஆளு ஓபிஎஸ்” – கொளுத்தி போட்ட ஸ்டாலின்!

அப்படியெனில் ஆட்சிக்கு எதிராக ஓட்டுப்போட்ட பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேர் டெபாசிட் வாங்கக்கூடாது என்றும் அர்த்தம். பன்னீர்செல்வத்தை தியாகி என பலரும் நினைக்கின்றனர். ஆனால், அவர் பெரிய புத்திசாலி. தோற்கப் போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளராக பழனிசாமியே இருக்கட்டும் என புத்திசாலித்தனமாக அவர் சொல்லியுள்ளார். மூன்று முறை முதல்வராக வாய்ப்பு பெற்ற அவர் தன் தொகுதிக்கு கூட ஒன்றும் செய்யவில்லை.

Image

ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணை கமிஷன் வைக்க வேண்டும் எனக்கூறிய அவர், அந்த கமிஷன் முன்பு இதுவரை ஆஜராகவில்லை. ஜெயலலிதாவிற்கே துரோகம் செய்தவர் பன்னீர்செல்வம். தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக பெரிய நாடகத்தை நடத்தினர். சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளில் வன்னியர் உள்ஒதுக்கீடு சட்டத்தை கொண்டுவந்து நிறைவேற்றினர். அப்போது அமைதியாக இருந்து கைத்தட்டி வரவேற்ற பன்னீர்செல்வம், இப்போது அது தற்காலிகமானது என்கிறார். ஆனால், பாமக நிறுவனர், இது நிரந்தரமான சட்டம் என முதல்வர் உறுதியளித்ததாக கூறியுள்ளார். மக்களை ஏமாற்றுவதற்காக இதுபோன்ற நாடகமாடுகின்றனர்” என்றார்.