“சுவர் ஏறி குதிச்சி ஓடுன மந்திரி அவர் தான்” – ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!

 

“சுவர் ஏறி குதிச்சி ஓடுன மந்திரி அவர் தான்” – ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!

நாகை மாவட்டத்திலுள்ள தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தில் பேசிய அவர், “இந்த மாவட்டத்தில் ஒரு அமைச்சர் இருக்கிறார். பணம் என்றால் ஓ.எஸ்.மணியன். பணம் இல்லை என்றால் ‘நோ’ எஸ்.மணியன். அவரைச் சரியாக அடையாளம் காட்ட வேண்டும் என்றால், சுவர் ஏறி குதித்து ஓடிய மந்திரி என்றால் அவரை எல்லோருக்கும் தெரியும். கஜா புயலின்போது பொதுமக்கள் அவரை ஓட ஓட விரட்டி இருக்கிறார்கள்.

“சுவர் ஏறி குதிச்சி ஓடுன மந்திரி அவர் தான்” – ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!

அமைச்சர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, 150 பேர் மீது கொலை முயற்சி, திருட்டு, குண்டர் சட்டம் எனப் பல்வேறு வழக்குகளைப் போட வைத்திருக்கிறார். இதனால் அவர்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்ததும் அத்தனை வழக்குகளும் வாபஸ் பெறப்படும். வழக்குப் போட்ட அவர்தான் ஜெயிலுக்குப் போகப் போகிறார். இந்திய எல்லையில், சர்வதேச எல்லையில் மீன் பிடித்தால் கூட சுடுகிறார்கள். நிலைமை இப்படி இருக்க இலங்கை கடலில் மீன் பிடிக்கலாம் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மீனவர்களிடம் பொய்யான வாக்குறுதியை அளித்து வாக்குச் சேகரித்திருக்கிறார்” என்றார்.