`தந்தை, மகனை கொன்ற காவலர்கள் மீது கொலை வழக்கு பதியணும்!’- மு.க.ஸ்டாலின்

 

`தந்தை, மகனை கொன்ற காவலர்கள் மீது கொலை வழக்கு பதியணும்!’- மு.க.ஸ்டாலின்

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகத்தினரின் கடும் அழுத்தத்தால் ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கை முதல்வர், சிபிஐ விசாரணைக்கு மாற்றியுள்ளார்.

`தந்தை, மகனை கொன்ற காவலர்கள் மீது கொலை வழக்கு பதியணும்!’- மு.க.ஸ்டாலின்

நீதி வழங்கும் அரசியல் துணிவும், முதுகெலும்பும் அரசுக்கு இருந்திருப்பின் உயிர்பறித்த காவல்துறையினர் இப்போதும் சுதந்திரமாக உலவ முடியுமா? இரு அப்பாவிகளின் உயிர் பறிக்கப்பட்டிருப்பதற்கும் அவர்களது குடும்பத்திற்கும் நீதி வழங்க வேண்டும் எனில், அவர்களின் கோரிக்கையை ஏற்று கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட காவல்துறையினரை கைது செய்ய வேண்டும்” என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா குறித்து தான் கூறிய ஆலோசனைகளை தமிழக முதல்வர் ஏற்கவில்லை என்று குற்றம்சாட்டியுள் மு.க.ஸ்டாலின், தற்போது அவர் செயல்படுத்திய ஒன்றிரண்டும் கூட தன்னுடைய ஆலோசனைகள் தான் என்பதையும் மக்கள் அறிவர் என்றும் கொரோனாவிலிருந்து மக்கள் காக்கப்படும் வரை தான், மக்கள் பிரச்னைகளை சுட்டிக்காட்டுவேன் என்றும் கூறியுள்ளார்.