‘திமுக ஆட்சி அமைந்த பிறகு’… மு.க.ஸ்டாலினின் முக்கிய அறிவிப்பு!

 

‘திமுக ஆட்சி அமைந்த பிறகு’… மு.க.ஸ்டாலினின் முக்கிய அறிவிப்பு!

ஸ்டெர்லைட் அனைத்து கட்சிக் கூட்டத்தில் திமுக வலியுறுத்திய கருத்துக்கள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலைக்கான அனுமதி தற்காலிகமானது. அதுவும் ஆக்ஸிஜன் தயாரிக்க மட்டுமே இந்த அனுமதி. வேறு எந்த வடிவிலும் ஆலையை இயக்கக் கூடாது. ஆக்சிஜன் மட்டுமே தயாரிக்கப்படுகிறது என்பதை கண்காணிக்க மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மக்கள் நலவாழ்வு துறை அதிகாரி ஆகியோர் தலைமையில் ஒரு குழு அமைத்திட வேண்டும்.

‘திமுக ஆட்சி அமைந்த பிறகு’… மு.க.ஸ்டாலினின் முக்கிய அறிவிப்பு!

குழுவில் தூத்துக்குடி மாவட்ட மக்கள், ஸ்டெர்லைட் போராட்டக் குழு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம்பெற்ற வேண்டும். அனுமதியை எக்காரணம் கொண்டும் முன்னுதாரணமாக வைத்து ஆலையை நிரந்தரமாக திறக்க அனுமதிக்கக் கூடாது. தயாரிக்கப்படும் ஆக்சிஜனை தமிழக மக்களுக்கு தேவைப்படும் அளவிற்கு இலவசமாக அளிக்க வேண்டும். தமிழக அரசு தான் மின்சாரம் வழங்க வேண்டும் என திமுக தரப்பில் வலியுறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திமுக ஆட்சி அமைந்த பிறகும் எந்தச் சூழலிலும் நச்சு ஆலை ஸ்டெர்லைட் திறக்கப்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.