பிரச்சாரத்தில் பஞ்ச் அடித்த மு.க.ஸ்டாலின்.. தொண்டர்கள் கர கோஷம்!

 

பிரச்சாரத்தில் பஞ்ச் அடித்த மு.க.ஸ்டாலின்.. தொண்டர்கள் கர கோஷம்!

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சூழலில் பிரச்சாரங்கள் அனல் பறக்கும் நடந்துகொண்டிருக்கின்றன. அந்த வகையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்தை ஆதரித்து இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், முதல்வராக இருக்கும் எடப்பாடி தமிழக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. நான் எடப்பாடியில் பிரச்சாரம் செய்தபோது மக்கள் மத்தியில் அது வெளிப்பட்டது. மத்திய அரசுடன் சேர்ந்து கொண்டு தமிழகத்துக்கு விரோதமான திட்டங்களை கொண்டு வருகிறார் என்று கடுமையாக சாடினார்.

பிரச்சாரத்தில் பஞ்ச் அடித்த மு.க.ஸ்டாலின்.. தொண்டர்கள் கர கோஷம்!

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், தேர்தல் வருவதால் சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்க விடமாட்டோம் என முதல்வரும் பாஜகவும் நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். மீனவர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என மோடி உறுதி அளித்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை ஏதும் செய்யவில்லை. அதிமுகவை நிராகரிப்போம். உதய சூரியனுக்கு வாக்களியுங்கள். திமுக கொடுத்த 505 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்றார்.

பிரச்சாரத்தில் பஞ்ச் அடித்த மு.க.ஸ்டாலின்.. தொண்டர்கள் கர கோஷம்!

மேலும், கொரோனா வேகமாக பரவி வருவதால் மக்கள் எல்லாரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டுமென கேட்டுக் கொண்ட ஸ்டாலின், நான் உங்களிடம் இருந்து தூரமாக இருப்பதால் மாஸ்க் போட வில்லை. கூட்டத்தில் இருக்கும் நீங்கள் கண்டிப்பாக மாஸ்க் அணியுங்கள். தடுப்பூசியும் போட்டுக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தார். இதனிடையில், ‘உரிமையை காக்க உதயசூரியன்; உயிரை காக்க மாஸ்க்’ என பஞ்ச் அடித்தார். அப்போது அக்கூட்டத்தில் இருந்த மக்கள் கர கோஷம் எழுப்பினர்.