அமைச்சர் கடம்பூர் ராஜூக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்

 

அமைச்சர் கடம்பூர் ராஜூக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்

ஸ்டாலின் மீது நிச்சயம் வழக்கு தொடரப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதற்கு மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

அமைச்சர் கடம்பூர் ராஜூக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்

அமைச்சர் கடம்பூர் ராஜூ திரையரங்க உரிமையாளர்களிடம் பேரம் பேசியதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். இதுகுறித்து நேற்று கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ , மு.க ஸ்டாலின் பொய்யான குற்றசாட்டுகளை கூறி வருகிறார். அவரைப்போல தரம் தாழ்ந்து பேச நாங்கள் தயாராக இல்லை. ஏற்கனவே கோவில்பட்டி குடிநீர் திட்டம் அவர் பொய்யான தகவலை கூறினார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. ஆனால் எனக்கே சராசரி அறிவுகூட இல்லை என்று அவர் சொல்கிறார். தியேட்டர்கள் மூடியிருந்த போது நான் பேரம் பேசியதாக சொல்கிறார். அவர் தான் எனக்கு புரோக்கர் வேலை பார்த்தாரா? இது தொடர்பாக ஸ்டாலின் மீது நிச்சயம் வழக்கு தொடரப்படும் என்றார்.

அமைச்சர் கடம்பூர் ராஜூக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்

இந்நிலையில் நெல்லை வீரவநல்லூரில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின், ” வழக்கு தொடரப்படும் என்று கூறுகிறார்களே தவிர வழக்கு போட்டதாக தெரியவில்லை. முதல்வர் முதல் யாரும் என் மீது வழக்கு போடவில்லை. முதலில் வழக்கு போடட்டும் அதை சந்திக்க நான் தயார் ” என்றார்.