தற்போது உள்ள சூழலில் பள்ளி, கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை – முதல்வர் ஸ்டாலின்.

 

தற்போது உள்ள சூழலில் பள்ளி, கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை – முதல்வர் ஸ்டாலின்.

குடியரசு தலைவர் ராம் கோவிந்தை சந்திப்பதற்காக டெல்லி சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரை சந்தித்து நீட் தேர்வு, மேகதாது அணை உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய பிரச்னைகள் குறித்து எடுத்துரைத்தார்.

தற்போது உள்ள சூழலில் பள்ளி, கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை – முதல்வர் ஸ்டாலின்.

குடியரசு தலைவருடனான சந்திப்புக்கு பின் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவுக்குத் தலைமை தாங்க குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்துவைக்க குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனது கோரிக்கையை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார்.

7 பேர் விடுதலை விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளேன். மேகதாது விவகாரம் தொடர்பாக பிரதமர், மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். கொரோனா 3ஆவது அலையை தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. தற்போது உள்ள சூழலில் பள்ளி, கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை” எனக் கூறினார்.