எடப்பாடியின் கையைவிட்டு நழுவி திமுக கைக்கு ஆட்சி வரப்போகிறது- ஸ்டாலின்

 

எடப்பாடியின் கையைவிட்டு நழுவி திமுக கைக்கு ஆட்சி வரப்போகிறது- ஸ்டாலின்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாணியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “தகுதி இல்லாத ஒருவர் தமிழகத்தின் முதலமைச்சர் ஆகியுள்ளார். இன்றைய ஆட்சி மக்களை மறந்த ஆட்சி. மக்கள் விரோத ஆட்சி. அதிமுக ஆட்சியை மக்கள் தண்டிக்க போகின்றனர்.எடப்பாடி பழனிசாமியின் கையை விட்டு ஆட்சி நழுவ போகிறது. திமுக கையில் தான் ஆட்சி வரப்போகிறது. கருணாநிதி இல்லை என்றாலும், அவரின் எண்ணம், உணர்வு நம்முடன் இருக்கும். திமுக ஆட்சியில் விருத்தாசலம் தனி மாவட்டம் ஆக்கப்படும். ஸ்டாலின் சொல்கிறார், முதலமைச்சர் பழனிசாமி செய்கிறார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் என்.எல்.சி. குறைகள் தீர்க்கப்படும்.

எடப்பாடியின் கையைவிட்டு நழுவி திமுக கைக்கு ஆட்சி வரப்போகிறது- ஸ்டாலின்

இன்று தமிழகத்தில் முதல்வர் ஒருவர் இருக்கிறார். அவர் இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். செயல்பட்டு கொண்டிருக்கிறார் என சொல்ல முடியாது. தேர்தல் நெருங்க நெருங்க புதிய புதிய அறிவிப்புகளை வெளியிட்டு கொண்டிருக்கிறார்.திமுக என்றுமே விவசாயிகளுக்கு பக்கபலமாக இருக்கும். உலகிலேயே கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவி செய்த ஒரே கட்சி திமுக. கொரோனா காலத்திலும் அனைத்து டெண்டரிகளிலும் அதிமுக அரசு ஊழல் செய்துவருகிறது.