திமுகதான் நாட்டையும் காப்பாற்றும் என்ற உணர்வில் மக்கள் இருக்கின்றனர்- ஸ்டாலின்

 

திமுகதான் நாட்டையும் காப்பாற்றும் என்ற உணர்வில் மக்கள் இருக்கின்றனர்- ஸ்டாலின்

கோவை தனியார் ஹோட்டலில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “இன்னும் ஒரு மாசத்தில் தேர்தல் வர போகின்றது. ஏப்ரலில் சட்டமன்ற தேர்தல் வந்துவிடும். பழனிச்சாமி ஆட்சியை தூக்கி எறிய தயாராக இருங்கள். சூழல் அப்படித்தான் இருக்கிறது. திமுகதான் மக்களையும் நாட்டையும் காப்பாற்றும் என்ற உணர்வோடு மக்கள் இருக்கின்றனர் கொரோனாவிலும் கொள்ளையடித்த ஆட்சி இது. விமான நிலையம் வரும் முன்பு டி.வி பார்த்தேன் விவசாய குடிமக்கள் டெல்லியில் போராடி வருகின்றனர். கடும் பனியில் குழந்தைகளோடு போராடி வருகின்றனர். மத்திய அரசு அவர்களை அழைத்து பேசுவது கண்துடைப்பு பேச்சு. ஏராளமான விவசாயிகள் இதுவரை உயிரிழந்து இருக்கின்றனர். இந்த சட்டம் பாராளுமன்றத்தில் வந்த போது எதிர்த்த கட்சி திமுக. ஆனால் இந்த வேளாண் சட்டத்தை ஆதரித்த கட்சி அதிமுக. அவர்கள் ஆதரிக்கவில்லை எனில் இந்த வேளாண் சட்டமே வந்திருக்காது

திமுகதான் நாட்டையும் காப்பாற்றும் என்ற உணர்வில் மக்கள் இருக்கின்றனர்- ஸ்டாலின்

இன்று விவசாயிகள் டிராக்டர் மூலமாக டெல்லி சென்று பேரணி நடத்தி வருகின்றனர் அரசு அனுமதி கொடுத்து இருக்கின்றனர். அனுமதியுடன் பேரணி நடத்திய போது மத்திய அரசு காட்டுமிராண்டி தனமாக விவசாயிகளை நடத்துகிறது. டிராக்டர்களை அடித்து உடைத்து இருக்கின்றனர். ஒருவர் உயிரிழந்து இருக்கின்றார். இப்படி ஒரு கொடுமை நடக்க காரணமே அதிமுக அரசுதான். மத்திய அரசு இந்த சட்டம் கொண்டு வந்தாலும் அதற்கு ஆதரவு அளித்தது அதிமுகதான்” எனக் கூறினார்.