“தமிழகத்தில் விடியல் பிறக்கும்; நல்லாட்சி மலரும்” – மு.க ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து!

 

“தமிழகத்தில் விடியல் பிறக்கும்; நல்லாட்சி மலரும்” – மு.க ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘இருள் நீங்கி,கதிரொளி பரவி தமிழகத்தில் நல்லாட்சி மலரும். மக்களுக்கு விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் புத்தாண்டை வரவேற்போம். கொரோனாவில் இருந்து வேகமாக மீண்டு வரும் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி வைக்கும் 2021 புத்தாண்டுக்கு இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எண்ணற்ற சவால்கள் நிறைந்த 2020ம் ஆண்டின் தாக்கம் தணிந்து விடாது. அதை நீக்க தொடர்ந்து பாடுபட வேண்டும். ஊழியம் செய்திட திமுக எப்போதும் போல தயாராக இருக்கிறது.

“தமிழகத்தில் விடியல் பிறக்கும்; நல்லாட்சி மலரும்” – மு.க ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து!

இந்த புத்தாண்டை, அன்பும் அமைதியும் நிறைந்த நிகழ்வாக கடைப்பிடித்திட வேண்டும். இதைத் தொடர்ந்து தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையும் வருகிறது. மக்கள் மனதில் மகிழ்ச்சி பொங்கும் நாள் விரைந்து வருவதை எடுத்துரைக்கும் வகையில், ‘சமத்துவப் பொங்கல்’ விழா நடத்திட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே போல, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மக்களுக்கு தெரிவித்துள்ள புத்தாண்டு வாழ்த்துக் குறிப்பில், “2020 போல் இல்லாமல் கொரோனா இல்லாத ஆண்டாக 2021 அமையட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.