விஸ்வநாதன் ஆனந்தின் தந்தை மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!

 

விஸ்வநாதன் ஆனந்தின் தந்தை மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!

தமிழகத்தை சேர்ந்த உலக செஸ் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் 2000,2007, 2008, 2010 மற்றும் 2012 என தொடர்ந்து 5 முறை பட்டம் வென்றார். விஸ்வநாதனுக்கு மிகவும் பக்க பலமாக இருந்தவர் அவரது தந்தை கே.விஸ்வநாதன்(92). இவர் ரயில்வேயில் பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

விஸ்வநாதன் ஆனந்தின் தந்தை மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஸ்வநாதன் இன்று காலமானார். அவரது மறைவுக்கு விளையாட்டு வீரர்களும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், விஸ்வநாதன் ஆனந்தின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், ‘ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று உலக அரங்கில் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த ‘கிராண்ட் மாஸ்டர்’ விஸ்வநாதன் ஆனந்த் அவர்களின் தந்தை கே.விஸ்வநாதன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரது பிரிவால் வாடும் விஸ்வநாதன் ஆனந்த், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.