அமைச்சர் தங்கமணியிடம் போனில் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்

 

அமைச்சர் தங்கமணியிடம் போனில் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்

தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் அவரின் மகனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அவர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். ஏற்கனவே அமைச்சர் தங்கமணியின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அமைச்சர் மற்றும் அவரது மகன் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர் தங்கமணியிடம் போனில் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்

இந்நிலையில் திமுக தலைவர் முகஸ்டாலின் அமைச்சர் தங்கமணியிடம் அவரது உடல்நலன் குறித்து விசாரித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “கோவிட் 19 தொற்றினால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மின்துறை அமைச்சர் தங்கமணி அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர் விரைவில் முழுநலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தேன்.
பொதுப்பணிகளில் இருப்பவர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!” என்று பதிவிட்டுள்ளார்.