அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

 

அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

திமுக இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்று இன்று மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் உதயநிதி.

சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை  செலுத்தினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் | Dinakaran

இதனையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தினார்‍. அதனை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்

இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்று மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி, அவர் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தினார். அப்போது அமைச்சர் சேகர்பாபு மற்றும் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் உதயநிதி ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனர்‍.