ஊராட்சி மன்றத் தலைவரது உயிருக்கே இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லையா?- ஸ்டாலின் கேள்வி

 

ஊராட்சி மன்றத் தலைவரது உயிருக்கே இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லையா?- ஸ்டாலின் கேள்வி

கோவை மாவட்டம் ஜெ.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சரிதா, கடந்த 21 ஆம் தேதி புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், தன்னை அதே ஊரை சேர்ந்த பாலசுப்ரமணியம் தன்னை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் , சாதிய தீண்டமையுடன் நடத்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து அதே ஊரை சேர்ந்த பாலசுப்ரமணியம் மீது சாதிய வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கோவை மாவட்டம் நெகமம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எஸ்.சி எஸ் டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஊராட்சி மன்றத் தலைவரது உயிருக்கே இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லையா?- ஸ்டாலின் கேள்வி

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில், “கோவை மாவட்டம் ஜே. கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. கே.சரிதா சாதிரீதியாக அவமானப்படுத்தப்பட்டும், கொலை மிரட்டலுக்கும் உள்ளாகி இருக்கிறார். தன்னை அவமானப்படுத்துபவர்கள் யார் என்று குறிப்பிட்டே கோவை மாவட்ட காவல்துறைக்கு புகார் கொடுத்துள்ளார். ஊராட்சி மன்றத் தலைவரது உயிருக்கே இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லையா? சரிதாவுக்கு சட்டப்பாதுகாப்பு தர வேண்டும். அவரை மிரட்டுவோர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.