“நான் பிரச்சினைகளைத் தீர்ப்பவன் தான்! இதோ ஓர் ஆதாரம்” – மு.க.ஸ்டாலின்

 

“நான் பிரச்சினைகளைத் தீர்ப்பவன் தான்! இதோ ஓர் ஆதாரம்” – மு.க.ஸ்டாலின்

கவுண்டம்பாளையம் தொகுதி வெள்ளக்கிணறுவில் கடந்த 9 ஆண்டுகளாக தெரு விளக்கு இல்லாத நிலையில் தெரு விளக்கு வசதி தற்போது செய்து தரப்பட்டுள்ளது.

“நான் பிரச்சினைகளைத் தீர்ப்பவன் தான்! இதோ ஓர் ஆதாரம்” – மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களுக்கு சென்று மக்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக அரசின் குறைகள், ஊழல்களை சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது. அதேபோல் பொதுமக்கள் தங்கள் தேவைகளை ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகளிடம் கூறி வருகின்றனர்.ஆனால் மக்கள் கிராம சபை கூட்டத்தால் எந்த பயனும் இல்லை. திமுகவால் மக்களின் தேவைகளை செய்து தர முடியாது என்று அதிமுக அரசு விமர்சித்து வருகிறது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் , “மு.க.ஸ்டாலின் கிராமசபை நடத்துகிறாரே அதனால் என்ன பயன், அவர் என்ன பிரச்சினையைத் தீர்க்கப் போகிறாரா? – என்று சில நாட்களுக்கு முன் கேட்டார் முதலமைச்சர்! ஆம் நான் பிரச்சினைகளைத் தீர்ப்பவன் தான்! இதோ ஓர் ஆதாரம்: கவுண்டம்பாளையம் தொகுதி வெள்ளக்கிணறுவில் நடைபெற்ற கிராம சபையில் அதிக வரி செலுத்தும் எங்கள் வீதியில் தெரு விளக்கு இல்லாததை 9 ஆண்டுகளாக ஆளும் அடிமை MLA-வால் கண்டுகொள்ளப்படவில்லை என்று ஒருவர் சொன்னார். இன்று அரசு சார்பில் தெரு விளக்கு அமைத்துக் கொடுத்துள்ளார்கள்!யாரிடம் சொன்னால் வேலை நடக்கும் என்பது மக்களுக்குத் தெரியும் முதலமைச்சர் பழனிசாமி அவர்களே!” என்று பதிவிட்டுள்ளார்.