துயரத்தில் இருக்கும் சீமானுக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!

 

துயரத்தில் இருக்கும் சீமானுக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானின் தந்தை செந்தமிழன் இன்று காலமானார். இச்செய்தி அக்கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது. அந்த ட்வீட்டில், “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தந்தை அப்பா செந்தமிழன் அவர்கள் மறைவுற்றார் எனும் செய்தியை மிகுந்த வருத்தத்தோடு தெரிவிக்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

துயரத்தில் இருக்கும் சீமானுக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!

சீமான் தந்தையின் மரண செய்தி கேட்டு அரசியல் கட்சித் தலைவர்களும் நாம் தமிழர் தொண்டர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் சீமானுக்கு இரங்கல் செய்தி விடுத்துள்ளார். அந்தச் செய்தியில், “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தந்தையார் செந்தமிழன் அவர்கள் மறைவெய்திய செய்தி வேதனையளிக்கிறது.

Image

அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, தந்தையை இழந்த துயரத்தில் இருக்கும் சீமான் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.