கொங்கு மண்டல திமுக நிர்வாகிகளுடன் மு.க ஸ்டாலின் ஆலோசனை!

 

கொங்கு மண்டல திமுக நிர்வாகிகளுடன் மு.க ஸ்டாலின் ஆலோசனை!

கொங்கு மண்டல நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் திமுக ஆட்சி அமைத்தாலும், கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அங்கு திமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டதன் காரணமாக, 2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தலிலும் திமுகவுக்கு சில இடங்கள் மட்டுமே கிடைத்தன. இதனால், வரும் சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மையான இடங்களை பிடிக்க திமுக திட்டமிட்டுள்ளது.

கொங்கு மண்டல திமுக நிர்வாகிகளுடன் மு.க ஸ்டாலின் ஆலோசனை!

அதன் படி கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர் கோவை உள்ளிட்ட மாவட்டங்களின் திமுக நிர்வாகிகளுடன் மு.க ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் 21ம் தேதி (இன்று) ஆலோசனை நடத்தவிருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார். இந்த நிலையில், மு.க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. இக்கூட்டத்தில் கட்சி ஆக்கப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படவிருப்பதாக தெரிகிறது.