ஆட்சியமைக்க உரிமை கோரினார் மு.க.ஸ்டாலின்

 

ஆட்சியமைக்க உரிமை கோரினார் மு.க.ஸ்டாலின்

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மு.க.ஸ்டாலின்

ஆட்சியமைக்க உரிமை கோரினார் மு.க.ஸ்டாலின்

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. திமுக கூட்டணி 156, அதிமுக கூட்டணி 75 இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில் திமுகவின் தலைவர் மு க ஸ்டாலின் வரும் 7 ஆம் தேதி முதல்வராக பதவியேற்கிறார்.

ஆட்சியமைக்க உரிமை கோரினார் மு.க.ஸ்டாலின்

இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சியமைக்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து உரிமை கோரினார் மு.க.ஸ்டாலின் . ஆதரவு எம்எல்ஏக்களின் கடிதம், அமைச்சரவை பட்டியலை ஆளுநரிடம் வழங்கினார் மு.க.ஸ்டாலின். சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்றதையடுத்து உரிமை கோரினார் ஸ்டாலின். பதவியேற்பு விழா எளிய முறையில் ஆளுநர் மாளிகையில் நாளை மறுதினம் நடைபெற உள்ளது . ஸ்டாலினின் முதல் அமைச்சரவையில் யார் யாருக்கு இடம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.முன்னதாக நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஸ்டாலின் சட்டமன்ற தலைவராக தெரிவு செய்யப்பட்டார். 133 பங்கேற்ற கூட்டத்தில் ஒருமனதாக ஸ்டாலின் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவர் இன்று ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியது குறிப்பிடத்தக்கது.