“களங்கத்தை உண்டாக்கிய காரண கர்த்தாக்கள்”…இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்குதலுக்கு ஸ்டாலின் கண்டனம்!

 

“களங்கத்தை உண்டாக்கிய காரண கர்த்தாக்கள்”…இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்குதலுக்கு ஸ்டாலின் கண்டனம்!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில அலுவலகம் தாக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“களங்கத்தை உண்டாக்கிய காரண கர்த்தாக்கள்”…இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்குதலுக்கு ஸ்டாலின் கண்டனம்!
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “சென்னை தியாகராயர் நகர் செவாலியே சிவாஜி கணேசன் சாலையில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில அடுக்குமாடி அலுவலகம், சில சமூக விரோதிகளால் களங்கப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தீய செயல் கடும் கண்டனத்திற்குரியது.
களங்கத்தை உண்டாக்கிய காரண கர்த்தாக்கள் யார் என்பதை உடனடியாகக் கண்டுபிடித்து அ.தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டத்திற்குப் புறம்பான இது போன்ற செயல்கள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும். அந்தக் கட்சிக்குத்தானே நடந்திருக்கிறது என்று இப்போது அலட்சியப்படுத்தினால், பின்னர் ஆளும்கட்சி உள்ளிட்ட எந்தக் கட்சிக்கும் இதுபோன்று நடந்துவிடக்கூடும் என்பதைச் சற்று எண்ணிப் பார்க்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.