கமல் போட்டியிடும் தொகுதியை அலறவிட்ட ஸ்டாலின் ; குவிந்த மக்கள்!

 

கமல் போட்டியிடும் தொகுதியை அலறவிட்ட ஸ்டாலின் ; குவிந்த மக்கள்!

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனல் பறக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. வரும் ஏப்ரல் 4ஆம் தேதி வரை பிரச்சாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரை வேகவேகமாக செயல்படுத்தி வருகின்றனர்.குறிப்பாக திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி , கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

கமல் போட்டியிடும் தொகுதியை அலறவிட்ட ஸ்டாலின் ; குவிந்த மக்கள்!

மதுரை, திருச்சி, கன்னியாகுமரி ,திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அவர் இன்று கோவையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் களம் காண்கிறார். அவருக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன், பாஜக சார்பில் வானதி சீனிவாசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த மூன்று பேருமே அந்த தொகுதிக்கு தெரிந்த முகம் என்பதால் நட்சத்திர தொகுதியாக மாறியுள்ள கோவை தெற்கில் மும்முனை போட்டி நடைபெற்று வருகிறது.

கமல் போட்டியிடும் தொகுதியை அலறவிட்ட ஸ்டாலின் ; குவிந்த மக்கள்!

இந்நிலையில் கோவை பந்தய சாலையில் திமுக தலைவர் ஸ்டாலின் நடைபயணம் மேற்கொண்டவாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார், கோவை தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி, சிங்காநல்லூர் கார்த்திக் ஆகியோர் உடன் இருந்தனர்.வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ஸ்டாலினுடன் அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.