ஜன.5ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் மு.க.ஸ்டாலின்

 

ஜன.5ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஜனவரி 5ஆம் தேதி காஞ்சிபுரத்தில் பரப்புரையைத் தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

ஜன.5ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் மு.க.ஸ்டாலின்

2021 சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது. இதற்கான தமிழக அரசியல் கட்சிகள் தங்களை தயார்படுத்தி வருகிறது. அந்த வகையில் திமுக தேர்தல் அறிக்கை குழுவை ஏற்கனவே நியமித்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கருணாநிதியின் சொந்த ஊரான திருக்குவளையில் தேர்தல் பிரச்சாரத்தை உதயநிதி இன்று தொடங்கவுள்ளார். 100 நாட்கள் பரப்புரையில் ஈடுபடவுள்ள அவர், முதற்கட்டமாக தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு செல்கிறார்.

ஜன.5ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் மு.க.ஸ்டாலின்

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஜன.5ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார். ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ எனும் முழக்கத்துடன் ஜன.5 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையை தொடங்குகிறார் ஸ்டாலின்.