தனிக்கட்சி : வரும் 20ஆம் தேதி ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி ஆலோசனை!

 

தனிக்கட்சி :  வரும் 20ஆம் தேதி ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி ஆலோசனை!

மதுரையில் வரும் 20 ஆம் தேதி தனது ஆதரவாளர்களுடன் மு.க. அழகிரி ஆலோசனை நடத்துகிறார்.

நேரடியாக அரசியலில் பங்கேற்காமல் இருக்கும் மு.க.அழகிரி அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசிக்கிறார்.தனிக்கட்சி தொடங்குவது தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 20 ஆம் தேதி நடக்கும் ஆலோசனைக்கு பிறகு பல்வேறு மாவட்டங்களுக்கு மு.க. அழகிரி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

தனிக்கட்சி :  வரும் 20ஆம் தேதி ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி ஆலோசனை!

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த 2018 ஆம் ஆண்டு மறைந்தார். அவர் உயிருடன் இருக்கும் போதே கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் முன்னாள் எம்பி மு.க.அழகிரி. மதுரையில் செல்வாக்குமிக்க ஒருவராக வலம்வந்த அழகிரி , கட்சிக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு அவர் அரசியலில் ஈடுபடாமல் அமைதி காத்து வந்தார். கருணாநிதியின் அரசியல் வாரிசாக அறியப்பட்ட மு.க. ஸ்டாலின் அக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்று கொண்டார்.

தனிக்கட்சி :  வரும் 20ஆம் தேதி ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி ஆலோசனை!

தற்போது சட்ட பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுகவின் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் என்பது அனைவரும் அறிந்ததே.இந்த சூழலில் அழகிரி தனிக்கட்சி ஆரம்பிக்க திட்டம் வகுத்துள்ளார்.