நாடு முழுவதும் தளர்வுகள் அமல்படுத்தி வரும் வேளையில் திடீரென 2 வாரத்துக்கு முழு லாக்டவுனை அறிவித்த மிசோரம்….

 

நாடு முழுவதும் தளர்வுகள் அமல்படுத்தி வரும் வேளையில் திடீரென 2 வாரத்துக்கு முழு லாக்டவுனை அறிவித்த மிசோரம்….

தொற்று நோயான கொரோனா வைரஸ் நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. அதேசமயம் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமிம் அதன் பாதிப்பு குறைவாகவே உள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று அம்மாநில முதல்வர் சோராம்தங்கா தலைமையில் மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

நாடு முழுவதும் தளர்வுகள் அமல்படுத்தி வரும் வேளையில் திடீரென 2 வாரத்துக்கு முழு லாக்டவுனை அறிவித்த மிசோரம்….

அந்த கூட்டத்தில், அம்மாநிலத்தில் நிலவும் பொதுவான சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஜூன் 9ம் தேதி (இன்று) முதல் 2 வாரங்களுக்கு முழு லாக்டவுனை அமல்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும் தனிமைப்படுத்துல் காலம் 14 நாளிலிருந்து 21 நாட்களாக நீடிக்கவும் முடிவு செய்யப்பட்டது. லாக்டவுன் தொடர்பான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என மாநில தகவல் மற்றும் பொதுமக்கள் தொடர்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் தளர்வுகள் அமல்படுத்தி வரும் வேளையில் திடீரென 2 வாரத்துக்கு முழு லாக்டவுனை அறிவித்த மிசோரம்….

மிசோரம் மட்டுமல்ல மேற்கு வங்க மாநிலமும் தனது மாநிலத்தில் இம்மாதம் இறுதி வரை லாக்டவுனை நீடித்துள்ளது. மேற்கு வங்க மாநில அமைச்சரவை கூட்டம் முடிந்த பிறகு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: தற்போது உள்ள தளர்வுகள் மற்றும் நிபந்தனைகளுடன் இம்மாதம் இறுதி வரை லாக்டவுன் நீடிக்கப்பட்டுள்ளது. முதலில் திருமணம் அல்லது இறுதி சடங்கு போன்ற சமூக சடங்குகளில் 10 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி கொடுத்து இருந்தோம். தற்போது அதனை 25 பேர்களாக அதிகரித்து உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.