“ஆறு வயசு உறவுக்கார சிறுவனை கடத்தி …”பதினாலு வயசு சிறுவன் செய்யுற வேலையா இது.

 

“ஆறு வயசு உறவுக்கார சிறுவனை கடத்தி …”பதினாலு வயசு சிறுவன் செய்யுற வேலையா இது.

ஒரு பதினாலு வயதான சிறுவன் ,தன்னுடைய உறவுக்கார ஆறு வயது சிறுவனை கடத்தி கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளான்

உத்திரபிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் ஒரு 14 வயது சிறுவன் அவரின் உறவுக்காரர் வீட்டில் வளர்ந்து வந்தான். அந்த சிறுவனின் உறவுக்காரருக்கு ஆறு வயதில் ஒரு மகனிருந்தான் .அந்த வீட்டில் அந்த பதினாலு வயது சிறுவனுக்கு முன்னுரிமை கொடுக்காமல் அந்த ஆறு வயது சிறுவனுக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்த்தார்கள் அதனால் அந்த ஆறு வயது சிறுவன் பற்றி அவனின் பெற்றோர்களிடம் புகார் கூறினால் கண்டு கொள்ளாமல் இந்த பெரியவனை திட்டியுள்ளார்கள் .மேலும் அவனை திருடன், முரடன் என்று எல்லோர் முன்னாடியும் திட்டி அவமான படுத்தியுள்ளார்கள் .
அதனால் ஒருநாள் அந்த 14 வயது சிறுவன் தன்னுடைய உறவுக்கார ஆறு வயசு சிறுவனை கடத்தி கொலை செய்துவிட்டான் .மேலும் அவனின் பெற்றோரிடம் 50 லட்சம் பணம் கேட்டு மிரட்டல் கடிதம் எழுதியுள்ளான் .அதனால் போலீசார் அந்த சிறுவனை பிடித்து விசாரித்தார்கள்
அப்போது குற்றம் சாட்டப்பட்ட மைனர் தனது உறவுக்கார சிறுவனை கடத்தி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார், மேலும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரிடமிருந்து ரூ .50 லட்சம் மீட்கும் தொகையை கோரி கடிதம் எழுதியுள்ளதையும் ஒப்புக்கொண்டார்
இதற்கு முன்பு மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பான்ஸ்பர் கிராமத்தில் வசிக்கும் தீபக் குப்தாவின் மகன் கடத்தப்பட்டு, அவரின் குடும்பத்திடம் ரூ .50 லட்சம் பணத்தை கேட்டதையும் அந்த சிறுவன் கூறினான்
இப்போது அந்த இளைஞன் கைது செய்யப்பட்டு இப்போது ஒரு சிறார் தங்குமிடம் வீட்டிற்கு அனுப்பப்பட்டான்.

“ஆறு வயசு உறவுக்கார சிறுவனை கடத்தி …”பதினாலு வயசு சிறுவன் செய்யுற வேலையா இது.