குழந்தை கடத்தலில் சிக்கிய சிறுமி இரண்டு மாத கர்ப்பிணியாக மீட்பு !

 

குழந்தை கடத்தலில் சிக்கிய சிறுமி இரண்டு மாத கர்ப்பிணியாக மீட்பு !

திரிபுராவைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒரு குழந்தை கடத்தும் கும்பலில் மாட்டிக்கொண்டுள்ளார். தற்போது அந்த சிறுமி ஜிகுஞ்சுவை சேர்ந்த ஒருவனுக்கு விற்கப்பட்டதை அடுத்து இரண்டு மாத கர்ப்பிணியாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளார். அந்த சிறுமியின் உண்மை அடையாளங்களை மறைத்து அந்த நபர் தனது வீட்டில் சிறுமியை வைத்துள்ளான்.

பின்னர், போலீசாரிடம் அந்த சிறுமி தனது உண்மை அடையாளங்களை வெளிப்படுத்திய பின்னரும் போலீஸ் தரப்பில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, குழந்தைகள் நல அமைப்பின் மூலம் குற்றம் செய்தவர்கள் மீது போக்ஸோ மற்றும் குழந்தைகள் கடத்தல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. உனக்கோட்டா போலீஸ் சிறுமியின் குடும்பத்தினருக்கு இது குறித்து தகவல் தெரிவித்த போது அவர்கள் சிறுமியை சில நாட்களாக காணவில்லை என்று கூறியுள்ளனர்.

குழந்தை கடத்தலில் சிக்கிய சிறுமி இரண்டு மாத கர்ப்பிணியாக மீட்பு !

ராஜு என்ற நபர் இந்த சிறுமியை ஒரு நபரிடம் 1.5 லட்சத்திற்கு விற்றுள்ளான். வாங்கிய அந்த நபர் சிறுமியை தன் வீட்டில் வைத்து வன்கொடுமை செய்து வந்துள்ளான். பின்னர் சிறுமி கண்டுபிடிக்கப்பட்ட போது கர்ப்பமாக இருந்துள்ளார்.

சிறுமி அந்த நபரிடம் இருந்து தப்பிச் சென்ற பின் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பின்னர் அந்த நபர் தனது மனைவியைக் காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளான். பின்னர் போலீஸ் அந்த சிறுமியை கண்டுபிடித்த போது அந்த நபருடன் போக மறுத்துள்ளார். பாதுகாப்பும் கோரியுள்ளார். போலீசார் சிறுமியின் உண்மை அடையாளங்கள் குறித்தும் விலைக்கு வாங்கிய அந்த நபர் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.