“உன்னோடு உறவாடிய போட்டோவ ஊருக்கே போட்டு காட்டுவேன்” -காதலன் மிரட்டலால் காதலி செஞ்ச வேலை

 

“உன்னோடு உறவாடிய போட்டோவ ஊருக்கே போட்டு காட்டுவேன்” -காதலன் மிரட்டலால் காதலி செஞ்ச வேலை


அந்தரங்க போட்டோக்களை சமூக ஊடகத்தில் பரப்புவதாக காதலன் மிரட்டியதால் ஒரு காதலி தற்கொலை செய்து கொண்டார் .

“உன்னோடு உறவாடிய போட்டோவ ஊருக்கே போட்டு காட்டுவேன்” -காதலன் மிரட்டலால் காதலி செஞ்ச வேலை


உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் காந்திநகர் பகுதியில் வசிக்கும் 11ம் வகுப்பில் படிக்கும் 16 வயதான மாணவியொருவர் அதே பகுதியில் வசிக்கும் 20 வயதான வாலிபரோடு காதல் கொண்டார் .இந்த பருவ வயது கோளாறால் ஏற்பட்ட காதலால் அந்த பெண் அந்த காதலனோடு பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்தார் . அந்த நேரத்தில் அந்த காதலன் அந்த பெண்ணை ரகசியமாக போட்டோ எடுத்து வைத்துள்ளார் .
இந்நிலையில் சில மாதங்களுக்கு பிறகு அந்த பெண் அந்த காதலனின் மோசமான குணத்தை தெரிந்து கொண்டு அவரை விட்டு விலக தொடங்கினார் .ஆனால் அந்த காதலன் அந்த பெண்ணை மீண்டும் உல்லாசமாக இருக்க பல முறை போன் செய்து கூப்பிட்டார் .ஆனால் அந்த பெண் அவரின் உறவை கை விட்டு அவரை விட்டு விலகி சென்றார் .இதனால் அந்த காதலன் அந்த டீனேஜ் பெண்ணை மிரட்டத் தொடங்கி, அவரோடு இருக்கும் அந்தரங்கமான புகைப்படங்களை சமூக ஊடக தளங்களில் பரப்புவதாகக் கூறினார்.
இதனால் மிரண்டு போன அந்த பெண் அந்த ஊரிலிருக்கும் 165 அடி உயரமுள்ள தண்ணீர் தொட்டி மீது ஏறி கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார் .அதன் பிறகு போலீசார் இந்த தகவலை கேள்விப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் .பிறகு அந்த இடத்தில் , இறந்து போன அப்பெண் காதலன் மீது குற்றம் சுமத்தி எழுதியுள்ள தற்கொலை குறிப்பை மீட்டனர் .பிறகு அந்த பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக அந்த காதலனை போலீசார் கைது செய்தனர்

“உன்னோடு உறவாடிய போட்டோவ ஊருக்கே போட்டு காட்டுவேன்” -காதலன் மிரட்டலால் காதலி செஞ்ச வேலை