கொரோனா கொடுமையிலும் தணியாத காமவெறியாட்டங்கள்… சிறுமியை சிதைத்த கொடூரம்!

 

கொரோனா கொடுமையிலும் தணியாத காமவெறியாட்டங்கள்… சிறுமியை சிதைத்த கொடூரம்!

மத்திய மும்பை குடியிருப்பு கட்டிடத்தில் எட்டு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 33 வயது நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதி ஒரு வாரத்திற்கு முன்பு வரை கொரேனா கட்டுப்பாட்டு மண்டலமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்தது என்று போலீசார் தெரிவித்தனர்.

கொரோனா கொடுமையிலும் தணியாத காமவெறியாட்டங்கள்… சிறுமியை சிதைத்த கொடூரம்!

சிறுமி, மே 28 அன்று தனது வீட்டின் வராண்டாவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர் அவளை குடிநீர் பம்ப் உள்ள அறைக்குள் வலுக்கட்டாயமாக அழைத்து சென்றுள்ளார். பின்னர் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்ததாக கூறப்படுகிறது. தனக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவத்தை அந்த சிறுமி தனது தாய்க்கு தெரிவித்துள்ளார். இதை அடுத்து அவரது தாய அக்ரிபாடா காவல் நிலையத்தில் அந்த நபர்குறித்து புகார் அளித்தார். புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறை அந்த நபர் மீது ஐபிசி மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் சட்டம், 2012 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
“கடந்த 12 ஆண்டுகளாக கூலித்தொழிலாளியாக இருந்து வந்த அந்த நபர் தன் மீது போலீசில் புகார் அளித்ததை அடுத்து குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார். தலைமறைவான நபரை எப்படியும் பிடித்துவிடுவோம் என போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.