பேருந்துக்காக நின்றவர்கள் மீது மினிவேன் மோதல்- டீக்கடை உரிமையாளர் பலி!

 

பேருந்துக்காக நின்றவர்கள் மீது மினிவேன் மோதல்- டீக்கடை உரிமையாளர் பலி!

திருச்சி

திருச்சி அருகே பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தவர்கள் மீது மினிவேன் மோதிய விபத்தில் டீக்கடை உரிமையாளர் உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அடுத்த திண்டுக்கரை பேருந்து நிறுத்தம் பகுதியில் இன்று காலை பள்ளி மாணவர்கள் உள்பட ஏராளமானோர் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது, கரூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று, திண்டுக்கரை பேருந்து நிறுத்தம் அருகே வந்தது. இந்த நிலையில், திருச்சியில் இருந்து கரூர் நோக்கி சென்ற மினிவேன் ஒன்று எதிர்பாராத விதமாக, பேருந்தின் பக்கவாட்டு பகுதியில் உரசியதது.

பேருந்துக்காக நின்றவர்கள் மீது மினிவேன் மோதல்- டீக்கடை உரிமையாளர் பலி!

இதில் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம், பேருந்து நித்தம் பகுதியில் நின்றிருந்தவர்கள் மீது மோதியது. இதில் கொடியாலம் பகுதியை சேர்ந்த டீக்கடை உரிமையாளர் ஆறுமுகம் மற்றும் பள்ளி மாணவர்கள் உள்பட 6-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து, புகாரின் பேரில் ஜீயபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின்வேன் ஓட்டுநரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.