விராலிமலை தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக அறிவிப்பு!

 

விராலிமலை தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக அறிவிப்பு!

புதுக்கோட்டை

விராலிமலை சட்டமன்ற தொகுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை முதல் தொடங்கி நடைபெற்றது. இதில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், திமுக வேட்பாளர் தென்னலூர் பழனியப்பன் இடையயே கடும் போட்டி நிலவி வந்தது.

இந்த நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குறிப்பட்டு இருந்த எண்ணுக்கும், ஆவணங்களில் குறிப்பிட்டிருந்த எண்ணுக்கும் மாறுபாடு இருந்ததால் எதிர்க்கட்சி வேட்பாளர்கள், முகவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.

விராலிமலை தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக அறிவிப்பு!

இதனால் பல முறை வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. இதனிடையே 23 சுற்றுகளின் முடிவில் அமைச்சர் விஜயபாஸ்கர், திமுக வேட்பாளரை விட 19,044 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்தார். எனினும் வெற்றி பெற்றவர்களை அறிவிப்பதில் இன்று காலை வரை தாமதம் நீடித்து வந்தது.

இதனால், தேர்தல் முடிவுகளை விரைந்து அறிவிக்க வேண்டுமென அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில், விஜயபாஸ்கர், திமுக வேட்பாளர் பழனியப்பனை விட 23 ஆயிரத்து 644 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.