கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் அமைச்சர் விஜயபாஸ்கர்

 

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவுள்ளார்.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் அமைச்சர் விஜயபாஸ்கர்

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி திட்டம் கடந்த 16 ஆம் தேதி முதல் தொடங்கியது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.கொரோனா தடுப்பூசி திட்டத்தை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல்வர் பழனிசாமி துவங்கி வைத்தார். தமிழகத்தில் முதற்கட்டமாக 166 மையங்களில் கோவிஷீல்டு, கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் அமைச்சர் விஜயபாஸ்கர்

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்கிறார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இன்று காலை 9.45 மணிக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவுள்ளார். அச்சத்தைப் போக்கி மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக தடுப்பூசி போட்டுக் கொள்ள இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சரும் தடுப்பூசி எடுத்துக் கொள்கிறார்.