சாப்டீங்களா? நல்லா இருக்கீங்களா ? கொரோனா நோயாளிகளிடம் நலம் விசாரித்த அமைச்சர்

 

சாப்டீங்களா? நல்லா இருக்கீங்களா ? கொரோனா நோயாளிகளிடம் நலம் விசாரித்த அமைச்சர்

சாப்டீங்களா நல்லா? இருக்கீங்களா ? கழிவறை சுத்தமா இருக்கா? என கொரோனா நோயாளிகளிடம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நலம் விசாரித்த சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மன அழுத்தத்தில் உள்ள நோயாளிகளை ஊக்குவிக்கும் விதமாகவும், மன ஆறுதல் அளிக்கும் விதமாகவும் மருத்துவமனைகளில் வீடியோ காலிங் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி நோயாளிகள் அந்த வசதி மூலம் தங்களது குடும்பத்தினருடனோ அல்லது உறவினர்களுடனோ வீடியோகால் பேசலாம்.

சாப்டீங்களா? நல்லா இருக்கீங்களா ? கொரோனா நோயாளிகளிடம் நலம் விசாரித்த அமைச்சர்

இந்நிலையில் புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையிலிருந்து வீடியோ காலிங் மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். அவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா? உணவு தரமாக வழங்கப் படுகிறதா? என்பது குறித்தும் கேட்டறிந்தார்.