முகக்கவசம் என்னும் மகத்தான ஆயுதம் நம்மிடம் இருக்கிறது – அமைச்சர் விஜயபாஸ்கர்

 

முகக்கவசம் என்னும் மகத்தான ஆயுதம் நம்மிடம் இருக்கிறது – அமைச்சர் விஜயபாஸ்கர்

மக்கள் முகக்கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

200க்கும் மேற்பட்ட உலக நாடுகளை கொரோனா வைரஸ் புரட்டி போட்டிருக்கிறது. அதனுள் இந்தியாவும் ஒன்று. மக்களில் உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நபர்களை தாக்கி, அவர்களது உடலில் வேறு ஏதேனும் நோய்கள் இருக்கும் பட்சத்தில் மரணத்தை சந்திக்க வைக்கிறது இந்த கொடிய வகை கொரோனா வைரஸ். இதிலிருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ளும் ஒரே வழி சானிடைசரும் மாஸ்க்கும் தான்.

முகக்கவசம் என்னும் மகத்தான ஆயுதம் நம்மிடம் இருக்கிறது – அமைச்சர் விஜயபாஸ்கர்

பெரும்பாலும் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பேசுவது மூலமாக கொரோனா பரவுவதால் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என WHO தெரிவித்திருக்கிறது. நோயின் தாக்கத்தை உணர்ந்து மக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என மாநில அரசுகள் மக்களை வலியுறுத்தி வருகின்றன. தமிழகத்தில் மக்கள் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என சட்டமே உருவாக்கப்பட்டிருக்கிறது.

முகக்கவசம் என்னும் மகத்தான ஆயுதம் நம்மிடம் இருக்கிறது – அமைச்சர் விஜயபாஸ்கர்

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனாவை எதிர்கொள்ளும் மகத்தான ஆயுதமான மாஸ்க் நம்மடம் இருக்கிறது. அதனை மக்கள் கட்டாயம் அணிய வேண்டும் என தெரிவித்தார். மேலும், நாங்கள் உயிர் காக்கும் பணியை செய்து வருகிறோம், மக்கள் தடுப்பூசியை எண்ணி மாஸ்க் அணியாமல் இருக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.