தமிழகத்தில் மேலும் 1843 பேருக்கு கொரோனா! பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 46, 504 ஆக உயர்வு

 

தமிழகத்தில் மேலும் 1843 பேருக்கு கொரோனா! பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 46, 504 ஆக உயர்வு

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 80லட்சத்து 24ஆயிரமாக அதிகரித்துள்ளது. 4லட்சத்து 36ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. தமிழகத்தில் நேற்று வரை சுமார் 40,698 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

தமிழகத்தில் மேலும் 1843 பேருக்கு கொரோனா! பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 46, 504 ஆக உயர்வு

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்“இந்தியாவில் மட்டுமின்றி 210 நாடுகளுக்கு மேல் வளர்ந்த நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் அனைவரையும் விழி பிதுங்க வைத்துள்ளது. கண்ணுக்குத் தெரியாத இந்த வைரசை உயிரைக் கொடுத்து போராடி வருகிறோம். நோயை முன்கூட்டியே கண்டுபிடிப்பதால்தான் நாம் குணப்படுத்த முடிகிறது. கொரோனா வைரஸ் விவகாரத்தை முதலமைச்சர் தலைமையிலான அதிமுக அரசு திறம்பட கையாண்டு வருகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 797 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 25,344 ஆக அதிகரித்துள்ளது. எல்லா விபரங்களையும் தினமும் முழுவதுமாக கொடுக்கிறோம் எதையும் அரசு மறக்கவில்லை. சென்னையில் மட்டும் 1.85லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 1843 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 46, 504 ஆக உயர்ந்துள்ளது. ஒன்று ஒரே நாளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆகும். இதன்மூல கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479 ஆக உயர்ந்துள்ளது. இதில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 32 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 12 பேரும் அடங்குவர்” எனக்கூறினார்.