”மக்கள் பணியில் என்றும் நான்” அசத்தும் விஜயபாஸ்கர்

 

”மக்கள் பணியில் என்றும் நான்” அசத்தும் விஜயபாஸ்கர்

நாட்டிலேயே முதன்முறையாக கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அனைத்து கட்சிகளிலிருந்து ஒரு சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து குழு அமைத்துள்ளது திமுக அரசு. இந்த குழுவில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இடம்பெற்றுள்ளார்.

”மக்கள் பணியில் என்றும் நான்” அசத்தும் விஜயபாஸ்கர்

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்ட உடன் மக்கள் பரிசோதனை மேற்கொள்ளவேண்டும். அதன்பின் மருத்துவர்களின் ஆலோசனையின்படி தனிமைப்படுத்தி கொள்ளவேண்டும். கொரோனா முதல் அலையில் கற்றுக்கொண்ட அனுபவங்கள் மூலம் கொரோனா தொற்று மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். மக்கள் நலன் கருதி ஆளும் அரசுக்கு ஆலோசனை வழங்க தயார். கொரோனா தடுப்பு பணி என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது. ” என தெரிவித்தார்.